Wednesday, March 20, 2019

Sleeping Sounds - 20-03-2019

Song : Nizhal Thedi Vanthen
Movie : Pournami Alaigal (1985)
Music : Sankar Ganesh
Lyricist : Pulamai Pithan
Singers : S.Janaki,K.J.Jesudass

பாடல் : நிழல் தேடி வந்தேன்
திரைப்படம்:- பௌர்ணமி அலைகள்
ரிலீஸ்:- 1985;
இசை:- சங்கர் - கணேஷ்;
பாடல்:- புலவர் புலமைப்பித்தன்;
பாடியவர்கள்:- ஜேசுதாஸ், S.ஜானகி;

நிழல் தேடி வந்தேன்
நிஜம் ஒன்று கண்டேன்
நிழல் தேடி வந்தேன்
நிஜம் ஒன்று கண்டேன்
சருகான பூவும் மலரானது
மேகமே வா, தேன் மழை தா
தென்றல் காற்றே தேர் கொண்டுவா

இருமனம் வேறாய் இருக்கின்ற வேளை
திருமண வாழ்க்கை சிறைவாசமே
இருமனம் வேறாய் இருக்கின்ற வேளை
திருமண வாழ்க்கை சிறைவாசமே
மாலையில் கங்கையாய்
சோலையில் கானலாய்
மாலையில் கங்கையாய்
சோலையில் கானலாய்
வேறிடம் மாறலாம்
ஓரிடம் சேரலாம்
வேறிடம் மாறலாம்
ஓரிடம் சேரலாம்

இலக்கணம் பார்த்தால்
இலக்கியம் இல்லை
சகுனங்கள் பார்த்தால்
பயணம் இல்லை
இலக்கணம் பார்த்தால்
இலக்கியம் இல்லை
சகுனங்கள் பார்த்தால்
பயணம் இல்லை
சூழ்நிலை கைதியாய்
வாழ்வதே நீதியா


Tuesday, March 19, 2019

Sleeping Sounds - 19-03-2019



Song Name : Ilanjolai Poothadhaa Enna
Movie Name : Unakkaagave Vaazhgiren – 1986
Music : Ilayaraja
Singer : SP Balasubramanyam
Lyricist : Vairamuthu
Raagam : Dharmavathi

பாடல்: இளஞ்சோலை பூத்ததா
திரைப்படம்: உனக்காகவே வாழ்கிறேன்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
கவிதை : வைரமுத்து
ராகம்: தர்மவதி

ஆஆ ஆ..ஆஆ ஆஆ..ஆ ஆ
ஆஆ ஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ணக்கோலம்
இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ணக்கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட
சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா

எந்த சொந்தங்கள் யாரோடு என்று
காலம் தான் சொல்லுமா
பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம்
தேதி தான் சொல்லுமா
சோலை எங்கும் சுகந்தம்
மீண்டும் இங்கே வசந்தம்
நெஞ்சம் ஏன்தான் மயங்கும்
கண்கள் சொன்னால் விளங்கும்
ஒரு மௌனம் தீர்ந்தது சுதியோடு சேர்ந்தது
ஒரு தாளம் ராகம் சொல்ல
சந்தம் பொங்கும் மெல்ல
மாயம் அல்ல மந்திரம் அல்ல
இளஞ்சோலை பூத்ததா
இளஞ்சோலை பூத்ததா

ஊமையாய் போன சங்கீதம் ஒன்று
இன்று தான் பேசுதோ
மேடை இல்லாமல் ஆடாத கால்கள்
இன்று தான் ஆடுதோ
கண்ணில் என்ன கனவோ
நெஞ்சில் என்ன நினைவோ
நம்மை யார்தான் கேட்பது
விதி தானே சேர்ப்பது
இந்த பாசம் பாவம் இல்லை
நேசம் மோசம் இல்லை
கங்கை என்றும் காய்வதும் இல்லை
இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ணக்கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட
சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா
என்ன ஜாலம் வண்ணக்கோலம்




Sleeping Sounds - 18-03-2019



Song : Unnai naan ariven
Movie: Guna (1991)
Lyricist:Vaali
Singers: S.Janaki, S. Varalakshmi, Kamal hassan
Music Director: Ilaiyaraja

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாறரிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?
யார் இவர்கள் மாயும் மானிடர்கள்!
ஆட்டிவைதால் ஆடும் பாத்திரங்கள்!
உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?

தேவன் என்றால், தேவனல்ல, தரைமேல் உந்தன் ஜனனம்!
ஜீவன் என்றால், ஜீவனல்ல என்னைப்போல் இல்லை சரணம்!
நீயோ, வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை!
நானோ யாரும் வந்து தங்கி செல்லும் மாளிகை! 
ஏன் தான் பிறந்தாயோ?
இங்கே வளர்ந்தயோ?
காற்றே நீயே சேற்றின் வாடை கொள்ள வேண்டும்!

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?

உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?
தாய்ப்பறவை, மிதித்தால் சேய்ப்பறவை, நோவதில்லை, காயம் ஆவதில்லை!
உன்னை, நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?
கண்ணில், நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்



Sunday, March 17, 2019

Sleeping Sounds - 17-03-2019



திரைப்படம்:- கவிக்குயில்; 
ரிலீஸ்:- 29th ஜூலை 1977; 
இசை:- இளையராஜா; 
பாடலாசிரியர்:- பஞ்சு அருணாச்சலம்; 
பாடியவர்:- சுஜாதா மோகன்;  
நடிப்பு:- ஸ்ரீதேவி; 
தயாரிப்பு:- S.P. தமிழரசி; 
கதை:- R. செல்வராஜ்;  
டைரக்சன்:- தேவராஜ் மோகன்

காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ

காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
மனசோலையின் காவியமே உன்னை நாளும் நாளும் வேண்டுகிறேன்
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ

மாமர தோட்டத்து நிழலில் ஒரு மாலை பொழுதினிலே 

மாமர தோட்டத்து நிழலில் ஒரு மாலை பொழுதினிலே 
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
மாமர தோட்டத்து நிழலில் ஒரு மாலை பொழுதினிலே 
அந்த மாறன் அருகினிலே பூந்தென்றல் கமழ்ந்து வர 
நான் என்னை மறந்தேனே
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ

கூந்தலில் வாசனை மலர்கள் அவன் சூடும் அழகினிலே

கூந்தலில் வாசனை மலர்கள் அவன் சூடும் அழகினிலே
என்ன சுகமோ தெரியவில்லை 
என் தோளை தொடுவதென்ன பொன் மேனி சிலிர்ப்பதென்ன
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ

மார்கழி மாதத்து பனியில் என் தேகம் கொதிப்பதென்ன 

மார்கழி மாதத்து பனியில் என் தேகம் கொதிப்பதென்ன 
அவன் பார்வை குளிர்வதென்ன ஒரு பாசம் பிறப்பதென்ன 
அங்கு நானம் தடுப்பதென்ன 
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
மனசோலையின் காவியமே உன்னை நாளும் நாளும் வேண்டுகிறேன்
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ


              Download






Popular Posts